தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளுக்கிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

X
Komarapalayam King 24x7 |19 April 2025 9:57 PM ISTதி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளுக்கிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வடக்கு நகர தி.மு.க. சார்பில், 14வது வார்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது. வார்டு செயலராக இருக்கும் விஸ்வநாதன் என்பவருக்கு தகவல் தெரிவிக்காமல் கூட்டம் நடந்ததாக தெரிகிறது. இது பற்றி கேட்பதற்காக, விஸ்வநாதன், கூட்டம் நடக்கும் இடத்திற்கு சென்று, வார்டு செயலர் நான் இல்லாமல் எப்படி கூட்டம் நடத்தலாம் என்று கேட்டதாக கூறப்படுகிறது. நீங்கள் யார் இது பற்றி கேட்க, நாங்கள் அப்படிதான் கூட்டம் நடத்துவோம் என்று எதிர் தரப்பினர் சொல்ல, இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
