செஞ்சியில் பழங்குடி இன மக்களுக்கு பட்டா வழங்கிய முன்னாள் அமைச்சர்

செஞ்சியில் பழங்குடி இன மக்களுக்கு பட்டா வழங்கிய முன்னாள் அமைச்சர்
X
ஒன்றிய பெருந்தலைவர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 52 பழங்குடியினர்களுக்கு, 2 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு கட்டுவதற்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி முன்னிலை வகித்தார். ஏ.பி.டி.ஓ., பழனி வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார்.துணை சேர்மன் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, மண்டல துணை பி.டி.ஓ.க்கள் கந்தசாமி, அபிராமி, சையத் முபாரக், கணேசன், ஊராட்சித் தலைவர்கள் ரவி, அம்பிகா, கலைச்செல்வி, ராஜலட்சுமி கலந்து கொண்டனர். ஏ.பி.டி.ஓ., சசிகலா நன்றி கூறினார்.
Next Story