இலுப்பூர் அருகே பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது

X
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா மலைக்குடிபட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (38) என்பவர் இலுப்பூர் அருகே உள்ள பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலுப்பூர் காவல்துறையினர் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story

