வாலாஜா அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

வாலாஜாவில் உள்ள திருத்தணி தெத்து தெருவைச் சேர்ந்தவர் ஜிகுந்தர்பால் சோம்நாத் (வயது 74). இவரது மனைவியும், 2-வது மகனும் இறந்துவிட்டனர். மூத்த மகன் மற்றும் ஒரு மகள் அவரவர் குடும்பத்தினருடன் தனியாக வசித்து வருகின்றனர். ஜிகுந்தர்பால் சோம்நாத் ஓட்டலில் வேலை செய்து கொண்டு தனியாக வசித்து வந்தார். தள்ளாதவயதிலும் ஓட்டலில் வேலை செய்து பிழைத்ததாலும் தனிமையில் இருந்ததாலும் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

