மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர்கள் ஆய்வு

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் வீரவசந்தராயர் மண்டப கட்டுமானப் பணிகளை இன்று (ஏப்.20) தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி , ஆகியோருடன் இணைந்து ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அறங்காவலர் ருக்மணி பழனிவேல்ராஜன் ஆகியோர் ஆய்வின்போது உடனிருந்தார்.
Next Story