தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜை.

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜை.
X
பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதி சிவன் கோவில்களில்  தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பரமத்தி வேலூர், ஏப். 20:  பரமத்தி வேலூர் தாலுகா  பாண்டமங்கலம் அரசாயி அம்மன் கோவில்,புதிய காசி விஸ்வநாதர் கோயில், பரமத்தி பீமேஸ்வரர் கோவில், நன்செய் இடையாறு வீரட்டிஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பரிவார நெய்வமாக அமைந்துள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு பால்,நெய்,மஞ்சள்,திருமஞ்சல் மற்றும் திருநீறு உள்ளிட்ட வாசனை திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு பைரவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
Next Story