கோவை: உரிக்கிடங்கில் தீ விபத்து - மேயர் ஆய்வு!

கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் வெள்ளளூர் உரிக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை ஆய்வு செய்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், வெள்ளளூர் உரிக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், தீயை உடனடியாக அணைப்பதற்கும், மேற்கொண்டு பரவாமல் தடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மேயர் அவர்கள் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், துணை ஆணையாளர் குமரேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். வெள்ளளூர் உரிக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக விசாரித்து வருவதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story