உடல்நலக்குறைவால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை

X
சிவகங்கை மாவட்டம், புதுவயல் பகுதியைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 65). இவர் உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில் வேங்கவயல் சாலை பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மகன் சிவகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் சாக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story

