வருசநாடு பகுதியில் சிறுமி கர்ப்பம் நான்கு பேர் மீது போக்சா வழக்கு

X
வருசநாடு, சிங்கராஜபுரத்தைச் சேர்ந்த 17வயது சிறுமிக்கும் அப்பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கும் 2023ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது சிறுமி கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் மலர்கொடி அளித்த புகாரில் சிறுமியை திருமணம் முடித்த செல்வம், அவரது தந்தை கணேசன், தாய் பஞ்சம்மாள், சிறுமியின் தந்தை பூலோகம் ஆகியோர் மீது போலீசார் நேற்று(ஏப்.20) போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.
Next Story

