தாழனூர் அருகே கிணற்றில் ஆண் சடலம்

X
ராணிப்பேட்டை மாவட்டம் தாழனூர் கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக ஆற்காடு போலீசாருக்கு இன்று தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து வந்து அடையாளம் தெரியாத உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

