கஞ்சா விற்ற நபர் கைது

X
Komarapalayam King 24x7 |21 April 2025 7:14 PM ISTகுமாரபாளையத்தில் கஞ்சா விற்ற நபர் கைது செய்யப்பட்டார்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கஞ்சா விற்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. நடராஜன் தலைமையில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். காவேரி நகர் பகுதியில் கஞ்சா விற்பதாக அறிந்து, நேரில் சென்றனர். அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த ஜார்ஜ்சஞ்சய்குமார், 25, என்பவரை கைது செய்து, 500 ரூபாய் மதிப்புள்ள 50 கிராம் பொட்டலங்கள் பறிமுதல் செய்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
