அனாதையாக கிடந்த கைத்துப்பாக்கியை மீட்டு போலீசார் ரகசிய விசாரணை!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே கைத்துப்பாக்கி கிடப்பதாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமசந்திரன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்த போது பெட்ரோல் பங்க் பின்புறம் கிடந்த கைத்துப்பாக்கியை மீட்டனர்.பிஸ்டல் 0.32 எம்.எம்., 7.65 வகையை சேர்ந்த அந்த துப்பாக்கியை போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.யாரும் இதுவரை துப்பாக்கிக்கு உரிமை கோரவில்லை. உரிமம் இல்லாத துப்பாக்கியாக இருக்கலாம் என்பதால் சட்டவிரோத செயலில் ஈடுபட யாரேனும் பதுக்கி வைத்திருந்தனரா? என தொடர்ந்து ரகசியமாக விசாரணை நடந்து வருகிறது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி இயங்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story



