சேலத்தில் வயதான தம்பதியை தாக்கி நகை பறிப்பு:

X
சேலம் கிச்சிப்பாளையம் நாராயணநகரை சேர்ந்தவர் மாதவராஜ் (வயது 70). அவருடைய மனைவி பிரேமா (65). கடந்த 18-ந் தேதி இந்த தம்பதியை தாக்கி மர்மநபர்கள் நகை பறித்து சென்றனர். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரலணை நடத்தினர். விசாரணையில் நகையை பறித்ததாக அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த முஸ்தபா (30), முகமது புறா பகுதியை சேர்ந்த இம்ரான் (34) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் முஸ்தா மீது அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு பதிவாகி இருந்ததும், திருடிய நகையை தனது தாயார் முஸ்தரி ஜானிடம் (62) கொடுத்து வைத்ததும் தெரியவந்தது. தொடர்ந்து திருட்டு நகையை வாங்கி மறைத்து வைத்ததாக முஸ்தரி ஜானை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகையும் மீட்கப்பட்டது.
Next Story

