ஆண்டாள் கோவில் அருகே டூவீலர் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து. இருவர் படுகாயம்.

ஆண்டாள் கோவில் அருகே டூவீலர் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து. இருவர் படுகாயம்.
ஆண்டாள் கோவில் அருகே டூவீலர் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து. இருவர் படுகாயம். கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்தவர் பிரவீன் வயது 36. இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த சிவனாத் வயது 25. இவர்கள் இருவரும் ஏப்ரல் 9-ம் தேதி காலை 11 மணி அளவில், கரூர் தில்லை நகரில் இருந்து ராஜா நகர் செல்லும் சாலையில் ஆண்டாங்கோவில் அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அருகே சென்ற போது, எதிர் திசையில் கரூர், ஆண்டங்கோயில், தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் வயது 35 என்பவர் வேகமாக ஓட்டி வந்த சரக்கு வாகனம், பிரவீன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பிரவீனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக சிவநாத் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சரக்கு வாகனத்தை வேகமாகவும் அஜாக்கிரதையாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய பிரகாஷ் மீது நேற்று இரவு வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் நகர காவல்துறையினர்.
Next Story