வழக்கறிஞருக்கு அடி உதை வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

கனகம்மாசத்திரம் பஜாரில் பட்டப் பகலில் வழக்கறிஞருக்கு அடி உதை வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் பஜாரில் பட்டப் பகலில் வழக்கறிஞருக்கு அடி உதை வீடியோ சமூக வலைதளங்களில் வைரல். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கனங்கம்மாசத்திரம் நடு பஜாரில் 10 பேர் கொண்ட கும்பல் பேசிக் கொண்டிருந்தபோது அவர்களிடையே வாய் தகராறு ஏற்பட்டு வழக்கறிஞரை நான்கு பேர் கொண்ட கும்பல் திடீரென்று சுற்றி வளைத்து அடித்து உதைத்து சரமாரியாக தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக மாறி உள்ளது. இச்சம்பம் தொடர்பாக கனகம்மா சத்திரம் காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட வழக்கறிஞர் சதீஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது ஏற்பட்ட தகராறு தொடர்பாக வழக்கறிஞர் சதீஷை தாக்கியதாக தெரியவந்தது. நடு பஜார் அருகே பட்டப் பகலில் வழக்கறிஞரை நான்கு பேர் கொண்ட கும்பல் அடித்து உதித்து தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story