யு.பி.எஸ்.சி. தேர்வில் குண்டடம் விவசாயி மகள் சாதனை

X
திருப்பூர் மாவட்டம் குண்டடம் நந்தவனம்பாளையம் அருகே உள்ள வெறுவேடம்பாளையத்தை சேர்ந்த சந்திரசேகர்-ராஜேஸ்வரி. விவசாய தம்பதியின் மகள் மோகன தீபிகா (வயது 23). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். படித்து வந்தார்.இந்த நிலையில் கடந்த ஆண்டு அகில இந்திய அளவில் நடைபெற்ற யு.பி.எஸ்.சி தேர்வில் 617-வது இடம் பிடித்து சாதனை படைத்தார். கடந்த வருடம் மே மாதம் நடைபெற்ற யு.பி.எஸ்.சி. முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற மோகன தீபிகா செப்டம்பர் மாதம் நடைபெற்ற மெயின் தேர்விலும் வெற்றி பெற்றார். அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் மோகன தீபிகா இந்திய அளவில் 617-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இது குறித்து மோகன தீபிகா கூறியதாவது:- ஏழை விவசாயி மகளான நான் எனது ஊரில் உள்ள அரசு நடுநி லைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்தேன். மேல் நிலை மற்றும் கல்லூரி படிப்பை கோவையில் படித்தேன்.எனது குடும்ப சூழ்நிலை காரணமாக அரசு தேர்வில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு யு.பி.எஸ்.சி தேர்வு எழுத தயாரானேன். அதற்கு எனது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் உறுதுணையாக இருந்தனர். மேலும் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் எனக்கு மிகவும் பயனளித்தது. தமிழ்நாடு அரசு தேர்வு பயிற்சி மையம் மூலமாக தீவிரமாக படித்து இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். தமிழக அரசு சார்பில் சென்னையில் நடைபெற உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான பாராட்டு விழாவிற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. என்னை போன்று கிராமத்தில் உள்ள மாணவ- மாணவிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு அரசு தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்பதே எனது ஆசை. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story

