தரமான பொருட்களை சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் -

X
அரியலூர், ஏப்.24- அரியலூர் அண்ணா சிலை அருகில் நியாய விலை கடை விற்பனையாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் விரல் ரேகை பதிவு ஆதார் சரிபார்ப்பு 40% மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் டிஎன்சிஎஸ்சி எடை தராசும் அலுவலக கணினியோடு இணைத்து ரசிது வழங்கிய பின்பு தான் நியாய விலை கடை எடை தராசை விற்பனை நிலையத்துடன் இணைக்கப்பட வேண்டும் பொது விநியோகத் திட்டத்திற்கு தனி துறை உருவாக்கப்பட வேண்டும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்கப்பட வேண்டும் பள்ளித் தகுதிக்கேற்ப ஊதியம் வழங்குதல் வேண்டும் ஐஏஎஸ் தலைமையில் ஊதிய குழு அமைத்து ஒன்பதாவது மாநில ஊதிய மாற்ற குழுவுடன் சேர்க்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளும் ஏற்கனவே நிலுவையில் உள்ள 30 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் இக்கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி நிறைவேற்ற வேண்டும் என மாநிலம் தழுவிய மூன்று நாள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் 3ம் நாள் போராட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் நியாயக்கடை விற்பனையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story

