ஆழ்துளை கிணறை காப்பாத்துங்க பஞ்சாயத்து முற்றுகையிட்ட மக்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையம் புதூர் பஞ்சாயத்து அலுவலகத்தை சின்னூர் பகுதி மக்கள் முற்றுகையிட்டனர், பொள்ளாச்சி சாலை நசுவம்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள சுமார் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த தினசரி தண்ணீர் பஞ்சமில்லாமல் இருக்கும் போர் தற்போது சாலை விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலைத்துறையினரால் அளவீடு செய்யப்பட்டு கல்நட்டப்பட்டுள்ளது, அதனால் அளவீட்டுக்குள்ளாக ஆழ்துளை கிணறு இருப்பதால் அதனை மூடும் நடவடிக்கையில் நெடுஞ்சாலை துறை ஈடுபடாமல் ஆழ்துளை கிணறை பாதுகாத்து சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஆண்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
Next Story




