சேலத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

சேலத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
X
போலீசார் விசாரணை
சேலம் அஸ்தம்பட்டி கள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 30), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுவாதி. இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக திருமணமாகி சில நாட்களிலேயே கணவரை விட்டு சுவாதி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் ரவிச்சந்திரன் காணப்பட்டு வந்தார். நேற்று காலை வீட்டில் உள்ள ஒரு அறையில் ரவிச்சந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும் அஸ்தம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று ரவிச்சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரவிச்சந்திரன் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Next Story