நகராட்சி அலுவலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நல விழிப்புணர்வு கூட்டம்

X
Komarapalayam King 24x7 |24 April 2025 5:32 PM ISTகுமாரபாளையத்தில் நகராட்சி அலுவலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நல விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நகராட்சி அலுவலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நல விழிப்புணர்வு கூட்டம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக களப்பணியாளர் கவிதா பங்கேற்று பேசினார். இவர் பேசியதாவது: திருமண வயது பூர்த்தி அடையாமல் திருமணம் செய்யக் கூடாது. அவ்வாறு குழந்தை திருமணம் நடந்தால் தகவல் சொல்லுங்கள். உயர்யா நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் கொடுத்தவர் பெயர் மற்றும் விபரம் ரகசியமாக வைத்துக்கொள்ளப் படும். குழந்தையை தத்து எடுக்க விரும்புகிறவர்கள் எங்களை தொடர்பு கொண்டால், அதற்குரிய வழி சொல்கிறோம். இலவச தொலைபேசி: 1098. வாட்ஸ்அப் எண்: 9186111098. எந்த உதவை தேவை என்றாலும் எங்களை அழையுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
