கடற்கரையில் ஒதுங்கிய வாலிபர் பிணம்

கடற்கரையில் ஒதுங்கிய வாலிபர் பிணம்
X
குளச்சல்
குளச்சல் அருகே வெட்டுமடை கடற்கரையில் நேற்று ஒரு ஆண் பிணம் அலையில் கரையில் ஒதுங்கியது. இதை கண்ட அந்தப் பகுதி பொதுமக்கள் குளச்சல் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் மற்றும் லட்சுமிபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஜூலியஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவருக்கு சுமார் 35 வயது இருக்கும். இறந்தவர் சட்டை மற்றும் உள்ளாடை அணிந்திருந்தார். அவர் யார்?  எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரங்கள் தெரியவில்லை.       இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் கடலில் குதித்த தற்கொலை செய்து கொண்டாரா?  அல்லது கடலில் குளிக்க இறங்கிய போது அலையில் அடித்து செல்லப்பட்டு இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story