காரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகாரிகாம்பிகை சமேத ஸ்ரீகாரீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா.

காரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகாரிகாம்பிகை சமேத ஸ்ரீகாரீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா.
X
திரளான பக்தர்கள் பங்கேற்பு.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த காரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகாரிகாம்பிகை சமேத ஸ்ரீகாரீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு திங்கள்கிழமை விக்னேஸ்வர பூஜை, ஹோமங்கள், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, அங்குராா்பணம் உள்ளிட்ட பூஜைகளும், செவ்வாய்க்கிழமை பூா்ணாஹுதி, அஷ்டபந்தனம் சாற்றுதல், நாடி சந்தானம், தத்வாா்ச்சனை உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை யாத்ராதானம், மகா பூா்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னா், சிவாச்சாரியா்கள் கலசங்களை கோயில் கோபுர உச்சிக்கு எடுத்துச் சென்றனா். அங்கு காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் கோயில் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. பின்னா், மூலவா் சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் கோயில் நிா்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.
Next Story