காட்டு பன்றி மோதி பெண் பலி

X
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த விவசாயி மூவேந்திரன் மற்றும் அவரது மனைவி சீதாலட்சுமி ( 30) ஆகிய இருவரும் சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு டூவீலரில் நேற்று (ஏப்.24) அதிகாலை 5:30 மணிக்கு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது எஸ்.சென்னம்பட்டி - இடையபட்டி ரோட்டில் குறுக்கே வந்த காட்டுப்பன்றி மீது டூவீலர் மோதியதில் இருவரும் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர்.இதில் சிகிச்சை பலனின்றி சீதாலட்சுமி பலியானார். இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

