பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்திரை பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பழமை வாய்ந்த ஆண்டார் குப்பம் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்திரை பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கி 13 நாட்கள் விழா நடைபெறுகிறது முருகப்பெருமான் பச்சை மயில் வாகனம் தொட்டி உற்சவம் நாக வாகனம் தங்கமயில் வாகனங்களில் தினந்தோறும் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார் முக்கிய விழாவாக வருகிற 29 ஆம் தேதி தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார் வருகிற மே 1ஆம் தேதி ஏழாம் நாள் விழாவாக தேரோட்டம் நடைபெறுகிறது சித்திரை பிரம்மோற்சவ விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பாலாஜி பரம்பரை அரங்காவலர் AD ராஜசேகர் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்
Next Story






