மின்சாரம் தாக்கியதில் விவசாயி பலி

X
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடை பகுதி யைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சீதாராமன் (27) என்ற விவசாயிக்கு அலங்காநல்லூர் அருகே உள்ள வலசை பிரிவு நெடுங்குளம் கிராமத்தில் தோட்டத்துடன் கூடிய வீடு உள்ளது. இவர் தனது தோட்டத்து வீட்டுக்கு நேற்று முன்தினம் (பிப்.23) இரவு சென்று, வெளியே மின் விளக்கு பொருத்தும் பணியில் ஈடுபட்ட போது, எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரி சோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

