அகரம்: பஹல்காம்- தீவிரவாதி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி.

X
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டணம் கிழக்கு மண்டல் அகரம் கிராமத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வில் ஏராளமான பாஜகவினர். மெழுகுவத்தி ஏந்தி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ்,அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் தருமன், மண்டல செயலாளர் சகாதேவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரமூர்த்தி, பொதுச் செயலாளர்கள் அகிலன், ஆனந்தராஜ், மாவட்ட ஊடகப்பிரிவு பெரியசாமி, மூத்த நிர்வாகி மாணிக்கவாசகர், வசந்தகோகிலா,மஞ்சுளா, ஜெயகாந்தன், லோகநாதன், முருகன், பெரியண்ணன், கார்த்திகேயன், ஸ்ரீதர், கோபாலகிருஷ்ணன், குமரன், காந்தி, கருணாகரன், கோவிந்தராஜ், சபரிநாதன், குமரேசன், கில்லி என்கிற அனந்தநாராயண உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
Next Story

