சித்தூர் அருகே டூவீலரில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. இளைஞர் படுகாயம்.

சித்தூர் அருகே டூவீலரில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. இளைஞர் படுகாயம்.
சித்தூர் அருகே டூவீலரில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. இளைஞர் படுகாயம். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, முடிக்கணம் அருகே உள்ள காசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் அருண்குமார் வயது 27. இவர் ஏப்ரல் 22ஆம் தேதி இரவு 9:40 மணியளவில் தாராபுரம் - கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் சித்தூர் பிரிவு சாலை அருகே சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர மோட்டார் வாகனம் ஒன்று,ம அருண்குமார் ஓட்டிச் சென்று டூ வீலரின் பின்னால் மோதிவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்ததில் அருண்குமாருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக அருண்குமார் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை கொண்ட காவல் துறையினர், மோதி விட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது? அந்த வாகனத்தை ஓட்டிய நபர் யார்? என்று கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சின்னதாராபுரம் காவல் துறையினர்.
Next Story