ரேஷன் அரிசி கடத்தலில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் கைது.

ரேஷன் அரிசி கடத்தலில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் கைது.
X
ரேஷன் அரிசி கடத்தலில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் கைது.
கிருஷ்ணகிரி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் குருபரப்பள்ளி மேம்பாலம் அருகில் சம்பவம் அன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பிக் அப் வாகனங்களை சோதனை செய்த போது அதில் 4 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. போலீசார் விசாரணையில் அரிசியை கடத்தியது பெத்ததாளப்பள்ளியை சேர்ந்த கோவிந்தராஜ்(எ) மெர்சல்(34) மற்றும் 18, 17 வயதுடைய 2 பேர் என மொத்தம் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கோவிந்தராஜ்(எ) மெர்சல்(34) என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
Next Story