இரவு நேரத்தில் வீடு புகுந்து தாய், மகளுக்கு பாலியல் தொல்லை

இரவு நேரத்தில் வீடு புகுந்து தாய், மகளுக்கு பாலியல் தொல்லை
X
வாலிபருக்கு இரட்டை ஆயுள் - நாகை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு பகுதியை சேர்ந்தவர் முத்து (32). இவர் கடந்த 2024 - ம் ஆண்டு ஜுலை மாதம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பரவை பகுதியில், இரவு நேரத்தில் வீடு புகுந்து தாய், மகள் இருவரையும் தாக்கி பாலியல் தொந்தரவு கொடுத்து விட்டு தப்பிச் சென்றார். இது தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், வேளாங்கண்ணி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த 2 நாட்களுக்குள், குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட முத்துவை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாகை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகா, குற்றம் சாட்டப்பட்ட முத்துவிற்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.32 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அவரது தாயாருக்கும் இழப்பீட்டுத் தொகையாக ரூ.7 லட்சம் வழங்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
Next Story