வேப்பனப்பள்ளி: விற்பனை செய்தல் குறித்துவிவசாயிகளுக்கு பயிற்சி

X
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி வட்டாரத்தில் வேளாண்மைத் துறை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் (அட்மா) கீழ் மணியாண்டப்பள்ளி பகுதி விவசாயிகளுக்கு தேவையான உள் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியினை வேளாண்மைஉதவி இயக்குனர் சிவநதி தொடங்கி வைத்து வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்குறித்து விளக்கம் அளித்தார். இந்த பயிற்சியில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். கலந்துக்கொண்ட விவசாயிகளுக்கு தொழில்நுட்ப கையேடு மற்றும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது
Next Story

