சத்தியமங்கலம் அருகே என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை .
சத்தியமங்கலம் அருகே என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை . திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மனைவி ஸ்ரீதேவி. இவர்களுடைய மகன் வெங்கடேஷ் (வயது 22), இவர் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு பி.டெக் படித்து வந்தார். இதற்காக சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தார். கடந்த சில நாட்களாக வெங்கடேஷ் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகின்றன விஷம் குடித்தார் இந்தநிலையில் நேற்று முன் தினம் மாலை வெங்கடேஷ் விஷம் குடித்து அறையில் மயங்கி கிடந்தார். அதைப் பார்த்த உடன் தங்கியிருந்த சக மாணவர்கள் வெங்கடேஷை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில்புலன்சில் சத்தியமங்கலம் சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே வெங்கடேஷ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அதே ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story



