மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அறக்கட்டளையினர்.

மதுரை தெற்கு வாசல் காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் இன்று (ஏப்.27) மதியம் 1.30 மணியளவில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு முனீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன . பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சுமார் 20 கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பலசரக்கு தொகுப்பு அடங்கிய பை மற்றும் மதிய உணவு ஆகியன ஸ்ரீ முனீஸ்வரர் அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்டது.
Next Story

