வெள்ளியணை அருகே டூவீலரில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.

வெள்ளியணை அருகே டூவீலரில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.
வெள்ளியணை அருகே டூவீலரில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் அருகே கொளந்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டம் வயது 59. இவர் ஏப்ரல் 25ஆம் தேதி காலை 8 மணி அளவில், கரூர் - பாளையம் சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இவரது வாகனம் வெள்ளியணை தனியார் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அருகே சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர மோட்டார் வாகனம் ஒன்று கோதண்டம் டூவீலரின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த கோதண்டத்தை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கோதண்டத்தின் மகன் மணிகண்டன் வயது 20 என்பவர் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இதுதொடர்பாக மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது? அதன் ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Next Story