குளவிகள் கொட்டியதில் சிறுவன் உயிரிழப்பு

X
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாலச்சந்திரன் கூலி தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி. இவர்களுக்கு துருவன் என்ற மகன் உள்ளார். பாலச்சந்திரன் தனது -குடும்பத்துடன் பாப்பிரெட்டிப்பட்டி அருகே, செம்பியானூரில் உள்ள தனியார் தோட்டத்தில் 2 ஆண்டுகளாக தங்கி கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் பிற்பகல் பாலச்சந்திரன், அவருடைய மனைவி நந்தினி அங்குள்ள விவசாய கிணற்றின் அருகில் துணி துவைத்து கொண்டு இருந்தனர். அங்கு துருவன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த கூண்டில் இருந்து 10-க்கும் மேற்பட்ட குளவிகள் துருவனை கொட்டின.உடனே சிறுவனை அவனுடைய பெற்றோர் கே.என்.புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்பு மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவன் துருவன் சிகிச்சை பலனின்றி நேற்று ஏப்ரல் 27 உயிரிழந்தான். இது குறித்த புகாரின்பேரில் பொம்மிடி காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

