உடல் உறுப்புகள் தானம்

X
மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த கோச்சடை முத்தையா (47) என்பவர் இருசக்கர வாகனத்தில் காரைக்கேணி அருகே சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டு தலைக்காயம் ஏற்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் மூளைச்சாவு அடைந்தார். இதனால் அவரது உடலுறுப்பு தானம் செய்ய மனைவி நிர்மலா ஒப்புதல் அளித்தார். சிறுகுடல் சென்னை எம்.ஜி.எம்.,மருத்துவமனை, கல்லீரல் மதுரை வடமலையான் மருத்துவமனை, ஒரு சிறுநீரகம், கருவிழிகள் மதுரை அரசு மருத்துவமனை, மற்றொரு சிறுநீரகத்தை திருச்சி சுந்தரம் மருத்துவமனை நிர்வாகங்கள் தானமாக பெற்றுக் கொண்டன. கோச்சடை முத்தையாவால் 6 பேர் பயனடைந்துள்ளனர்.
Next Story

