வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
X
இளைஞர் இறந்தார் - நண்பருக்கு தொடர் சிகிச்சை
நாகை மாவட்டம் தலைஞாயிறு அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவர் காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் மன்மதசாமி (31). இவர் நேற்று முன்தினம் இரவு  தனது மோட்டார் சைக்கிளில் தனது நண்பருடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, காமேஸ்வரம் அருகே எதிரே வந்த வேன் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், பலத்த காயமடைந்த மன்மதசாமி, அவரது நண்பர் அருண்   ஆகியோரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு, நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அருணை   மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த மன்மதசாமி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து, கீழையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story