சாலை ஓரத்தில் இருந்தவர் மீது இரு சக்கர வாகன மோதி படுகாயம்

X
தேனி அருகே பழனிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதற்காக சாலையின் ஓரமாக நின்று இருந்துள்ளார். அப்பொழுது அவ்வழியாக விக்னேஷ் என்பவர் ஓட்டி வந்த பைக் மணிகண்டன் மீது மோதியது இதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் நேற்று (ஏப்.27) வழக்கு பதிவு.
Next Story

