கரூரில்,சைதன்யா டெக்னோ பள்ளியில் தேர்வில் முதலிடம் பெற்ற மாணாக்கர்களுக்கு பாராட்டு.
கரூரில்,சைதன்யா டெக்னோ பள்ளியில் தேர்வில் முதலிடம் பெற்ற மாணாக்கர்களுக்கு பாராட்டு. கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி துவங்கி, நடந்து முடிந்த சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. இதில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணாக்கர்கள் அதிக மதிப்பெண் பெற்று சிறப்பிடத்தை பெற்றதால், மாணாக்கர்களுக்கு பாராட்டு விழா பள்ளியின் கூட்டரங்கில் பள்ளியின் ஏஜிஎம் வெங்கடகிருஷ்ணா ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஜெயராம் பள்ளியின் தாளாளர் பொறியாளர் ராமசாமி பங்கேற்று சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 495 மதிப்பெண் பெற்ற இனியா,தன்விகா ஆகியோரை பாராட்டி பள்ளியின் சார்பாக பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இதே போல பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஸ்ரீ நந்தினி என்ற மாணவி அதிக மதிப்பெண் பெற்றதை முன்னிட்டு அவருக்கும் பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இதேபோல நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்,அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற 12 மாணவர்கள், 480 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற 17 மாணவ- மாணவிகளுக்கும் சால்வை அறிவித்து கேடயம் வழங்கி பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சந்திரமோகன், மேல்நிலைப்பள்ளி முதல்வர் தினேஷ், உயர்நிலைப்பள்ளி முதல்வர் வடிவுக்கரசி, மற்றும் பள்ளியில் பணியாற்றும் இருபால் ஆசிரியர்கள், மாணவ- மாணவியர் அவரது பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Next Story





