வாய்க்காலில் குளிக்கச் சென்ற டிரைவர் பிணமாக மீட்பு

வாய்க்காலில் குளிக்கச் சென்ற டிரைவர் பிணமாக மீட்பு
X
பல்லடத்தில் வாய்க்காலில் குளிக்கச் சென்ற டிரைவர் பிணமாக மீட்பு. காவல்துறை விசாரணை
பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவர் மகன் பத்மநாபன் (வயது 29). இவர் தனியார் பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி மாணிக்காபுரத்தில் உள்ள பி.ஏ.பி. பாசன வாய்க்காலில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே மாணிக்காபுரம் பி.ஏ.பி. பாசன வாய்க்காலின் கடைமடை பகுதியில் ஆண் பிணம் மிதப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்தவர் மாயமான பத்மநாபன் என்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story