விபத்தில் புது மாப்பிள்ளை உயிரிழப்பு

X
நாங்குநேரி பகுதியை சேர்ந்தவர் வெள்ள பாண்டி மகன் ராஜ் (25). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 11 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் இவரும் இவரது நண்பருமான அதே பகுதியை சேர்ந்த சிவா (23) என்பவரும் கடந்த 8-ம் தேதி குமரி மாவட்டம் குருந்தன்கோடு பகுதிக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது குருந்தன்கோடு பகுதியில் வரும்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் தூக்கி வீசுப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜ் நேற்று உயிரிழந்தார். அவரது நண்பர் சிவாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

