ஒரேமாதிரியான மதிப்பெண் பெற்ற இரட்டையர்கள்

ஒரேமாதிரியான மதிப்பெண் பெற்ற இரட்டையர்கள்
X
மதுரையில் இரட்டையர்கள் ஒரே மாதிரியான மதிப்பெண்ணை பெற்று அசத்தியுள்ளார்.
தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இனவெளியாகி உள்ள நிலையில் மதுரை சிம்மக்கல் பகுதியில் இருக்கக்கூடிய ஸ்ரீ சாரதா வித்யா வனம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இரட்டையர்கள் (மாணவிகள்) ஒரே மதிப்பெண்களை பெற்றுள்ளனர். மாயா ஸ்ரீ - 475 மதிப்பெண், மகா ஸ்ரீ - 475 மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என ஐந்து பாடங்களில் மதிப்பெண்கள் வெவ்வேறாக இருந்தாலும் ஒட்டுமொத்தமான மதிப்பெண் இருவரும் ஒரே மதிப்பெண் ஆக 475 ஐ பெற்றுள்ளனர். இந்த இரட்டையர்கள் மதுரை திருப்பாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story