வாணியம்பாடி அரசு மருத்துவமனை முழுவதும் மழை நீர் சூழ்ந்ததால் மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகள் பாதிப்பு..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனை முழுவதும் மழை நீர் சூழ்ந்ததால் மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகள் பாதிப்பு.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த 2 மணி நேரத்திற்கு மேலாக விட்டு விட்டு பெய்த கனமழையால் அரசு மருத்துவமனை முழுவதும் மழை நீர் சூழ்ந்ததால் மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகள் பாதிப்புகுள்ளாகி வருகின்றனர் ஆக்கிரமிப்புகளை முழுமையாக வருவாய்த்துறையினர் அகற்றாததே இதற்கு காரணமாக உள்ளது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றாசாட்டு தொடர்ந்து ஏழைகளின் குடிசைகள் வீடுகள் மட்டுமே அகற்றி வரும் வருவாய் துறையினர் அதிகளவில் செல்வந்தர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இன்றுவரை மெத்தனமாக வருவாய்த் துறையினர் செயல்பட்டு வருகின்றன. மேலும் கழிவு நீர் கால்வாய்கள் அங்கங்கே தூர்வாராமலும் முழுமையாக கழிவுநீர் கால்வாய் செல்வதற்கு கால்வாய் வசதிகள் சரி செய்யாததே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இனியும் காலம் தாழ்த்தாமல் இதுகுறித்து மாவட்ட நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்...
Next Story



