தவறவிட்ட செல்போன்களை ஒப்படைத்த எஸ் பி

தவறவிட்ட   செல்போன்களை ஒப்படைத்த  எஸ் பி
X
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டார். உத்தரவின்படி சைபர் பிரிவு போலீசார் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தொடர் நடவடிக்கையால் தற்போது சுமார் 55,27,000 (ஐம்பத்தி ஐந்து இலட்சத்து இருபத்தி ஏழாயிரம் ரூபாய்) மதிப்புள்ள 335 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நபர்களிடம் நேற்று ஒப்படைத்தார். இந்த செல்போன்களை கண்டுபிடிக்க காரணமான சைபர் பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார். மேலும் பொதுமக்கள் தங்களுடைய செல்போன் தொலைந்து போனால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக மனு அளிக்கவேண்டும் அல்லது TamilNadu Police Citizen Portal (https://eservices.tnpolice.gov.in) என்ற காவல் துறை இணையதளத்திலும் தங்களது புகாரை பதிவு செய்யலாம். CEIR Portal (https://www.ceir.gov.in/) என்ற இணையதளத்தில் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மனு ரசீதை பதிவேற்றம் செய்து புகார் அளிக்க காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story