தேனியில் பெற்றோரை இழந்த மாணவி பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை

தேனியில் பெற்றோரை இழந்த மாணவி பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை
X
தேர்வு
வருஷநாடு அருகே கோவில்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் 10ம் வகுப்பு மாணவி ஜெயகிருத்திகா. இவரது தாய் 10 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். 10ம் வகுப்பு அறிவியல் தேர்வு எழுத செல்லும் நாளில் தந்தை செந்தில்குமார் இறந்துவிட்டார். தந்தை இறந்த சோகத்துடன் அறிவியல் தேர்வை எழுதிவிட்டு தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். இந்நிலையில் 10ம் வகுப்பு பொது தேர்வில் ஜெயகிருத்திகா 458 மதிப்பெண் பெற்றுள்ளார்
Next Story