சரக்கு வாகனம் மீது மோதி படுகாயம் அடைந்தவர் மரணம்

X
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி கைலாசபுரம் கீழகோட்டையை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(30). இவர் நேற்று இரவு மறுகால்தலை அருகே பைக்கில் சென்றபோது சரக்கு வாகனம் மீது மோதி படுகாயமடைந்தார். இதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியில் உயிரிழந்தார். இது குறித்து சீவலப்பேரி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

