லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது

X
வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன், மூலனூர் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஈஸ்வரன் கோவில் அருகில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த மணி (வயது 31) என்பவரை கைது செய்தார். அவர் வெளி மாநில லாட்டரி சீட்டின் கடைசி மூன்று எண்கள் எழுதிய துண்டு சீட்டை ரூ.50 -க்கு விற்பனை செய்து குலுக்கல் விவரத்தை ஆன்லைனில் தெரிவித்து வந்தது தெரிய வந்தது.
Next Story

