இரயில் மோதியதில் முதியவர் பலி

இரயில் மோதியதில் முதியவர் பலி
X
மதுரை வாடிப்பட்டி அருகே ரயில் மோதியதில் முதியவர் பலியானார்.
மதுரையில் இருந்து சென்னை செல்லும் தேஜஸ் அதிவிரைவு ரயில் நேற்று முன்தினம் (மே.17) சென்று கொண்டு இருந்தது. அப்போது, ரயில் வருவதை கவனிக்காமல் வாடிப்பட்டி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற சுமார் 65 வயது முதியவர் மீது ரயில் மோதியதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மதுரை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில் மோதியதில் இறந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story