ராயப்பன் பட்டியில் பெட்டிக்கடையில் புகையிலை விற்ற முதியவர் கைது

X
இராயப்பன்பட்டி காவல் நிலைய போலீசார் சட்டவிரோத புகையிலை விற்பனை சம்பந்தமாக நேற்று (மே.18) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது சுருளிப்பட்டி பகுதியில் உள்ள பழனிமணி (70) என்பவரது பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. கடையில் இருந்த புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் பழனிமணி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story

