கணவர் மாயம். மனைவி புகார்.

X
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அரும்பனூர் கொடிக்குளம் யானைமலை குவாரி பகுதியில் வசிக்கும் நமச்சிவாயத்தின் மகன் சுதாகர் (53) என்பவர் மதுவுக்கு அடிமையானவர். இவர் கடந்த எட்டாம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களிலும் உறவினர் இல்லங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் இவரது மனைவி வள்ளி நேற்று (மே.18) ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன நபரை தேடி வருகிறார்கள்.
Next Story

