மாநில அளவிலான கராத்தே போட்டியில் குமாரபாளையம் மாணவர் தங்கப்பதக்கம்

மாநில அளவிலான கராத்தே போட்டியில் குமாரபாளையம் மாணவர் தங்கப்பதக்கம்
X
திருச்சியில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் குமாரபாளையம் மாணவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்திபுரம் பகுதியில் வசிப்பவர் உதயகுமார், பூங்கொடி தம்பதியர். இவர்களின் மகன் இன்பா உதயகுமார், 7. திருச்சியில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் குமிட்டே பிரிவில், பல்வேறு வயது பிரிவின் கீழ் போட்டிகள் நடந்தன. இதில் 7 வயது பிரிவின் கீழ் பங்கேற்ற இன்பா உதயகுமார்,  தங்கப்பதக்கம் வென்று, தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இவரை பயிற்சியாளர்கள் கவுதம் ரகுநாதன், கவின் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பலரும் பாராட்டினார்கள்.
Next Story